சுப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பூர்த்தி : ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா!!

437


sp

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர்.



கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது.

பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.



அனைவரையும் மெய்மறக்கச் செய்த ஸ்பூர்த்தி மக்கள் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை வென்றுள்ளார்.



இதில் ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா இரண்டாவது இடத்தை பெற்று 1 கிலோ தங்கத்தையும், ஹரிபிரியா மூன்றாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பரிசாக வென்றனர்.


வெற்றிபெற்ற அனைவர்க்கும் உலகத் தமிழர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.