நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து வீரர் கொரி அன்டர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார்.
இதனையடுத்து அதிரடியாக விளையாடிய அன்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு, அந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் தன்மையையே மாற்றக் கூடிய பிடியெடுப்பை ஜீவன் மெண்டிஸ் நழுவிட்டதோடு இல்லாமல் சிரித்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு, ரசிகர்ளுக்கும், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் இடையே பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.
இந்நிலையில் அவர் ஏன் அந்த மோசமான நிலையிலும் அவ்வாறு சிரித்தார் என்பதன் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது அவர் பிடியெடுக்கும் போது பந்து கைகளிருந்து நழுவி அவரின் மர்ம உறுப்பில் பட்டுள்ளது. இதனால் தான் அவர் சிரித்ததாக தெரியவந்துள்ளது.