30 பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்த நபருக்கு 1535 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

475

Rape

தென் ஆபிரிக்காவில் நபர் ஒருவர் 30 பெண்களை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆபிரிக்காவில் காட்டங் மாகாணத்தில் உள்ள டெம்பிசா பகுதியை சேர்ந்த நபர் அல்பட் மோராக்கே(35)

இவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பலாத்காரம், கடத்தல், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர் மீதான வழக்குகளை விசாரித்த ஜோகன்ஸ்பர்க் நீதிமன்றம் அனைத்து குற்றங்களையும் உறுதி செய்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 30 பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு 30 ஆயுள் தண்டனையும், திருட்டுக்கு 360 ஆண்டுகளும், கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு பல நூறு ஆண்டுகள் என மொத்தம் 1,535 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் 175 குற்றச்சாட்டுகளிலிருந்து அல்பர்டை விடுவித்த நீதிபதி, மற்ற தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அல்பர்ட் கொடூரமானவன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் கடும் தண்டனையை விதித்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.