அரசின் கைக்கூலிகளை இல்லாது ஒழிக்க நாம் முன்வந்துள்ளோம் : வவுனியாவில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!!(காணொளி)

464

Vijayakala

அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டவர்களை இல்லாது ஒழிக்க நாம் முன்வந்துள்ளோம் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்போட்டியின் பிரதம அதிதியாக நேற்று (20.02) மாலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பாடசாலையில் பௌதீக வளங்கள் போதியளவில் இல்லை. ஆனால் நாங்கள் அலரிமாளிகையை பார்க்கும்போது ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக அபிவிருத்தி செய்வதாக சொன்னவர்கள் அலரியமாளிகையை அபிவிருத்திசெய்துள்ளனர்


எங்களுடைய பணத்தையே அவர்கள் சூறையாடி கொண்டு சென்று வைத்திருந்தனர். போர் முடியும் காலத்தில் எங்களுடைய மக்களினுடைய பணத்தையும் நகைகளையும் கென்டெய்னர்களில் சூறையாடி ஆனால் எங்களுடைய சிறார்களுக்குப் படிப்பதற்கு கட்டிடம் இல்லை.

இவற்றுக்கெல்லாம் யார் உடந்தையாக இருந்தார்கள். எங்களை எங்கள் மண்ணில் இருந்த அகற்றுவதற்கு எங்களுடைய மக்கள் சிலரே அரசாங்கத்துடன் கைக்கூலிகளாக இருந்து வந்தார்கள். இன்று இந்த கைக்கூலிகளை முற்றாக அழிப்பதற்கு நாங்கள் முன்வருகின்றோம்.

இவர்களால் தான் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இவர்களின் வழிகாட்டலில்தான் தெற்கில் இருந்து அரசாங்கம் வந்து எம்மை தாக்கியது. ஆகவே இந்த சொற்றப ஆசைக்காக துணைபோகாது எமக்காக செயற்படவேண்டும்.

பாடசாலை ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது இப்பாடசாலை அதிபருக்கோ அல்லது வேறு பாடசாலை அதிபருக்கோ பிரச்சனை இல்லை. அவர்களை மாற்றம் செய்யும் போது பதிலீட்டு ஆசிரியர்களை கொடுக்கவேண்டும். ஆனால் அவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வழங்க மாட்டார்கள்.

அவர்களுக்கு எந்த எந்த பாடசாலையில் இருந்து ஆசிரியர்களை மாற்றம் செய்திருக்கின்றோம் மாற்றம் செய்யப்போகின்றோம் என்பது தெரியாது.
ஒரு பத்திரிகையில் நான் கண்ணுற்றேன் ஓய்வு பெற்ற ஆசிரியரையும் இடமாற்றம் செய்திருக்கின்றார்கள் என. வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு தெரியாது இவர் ஓய்வு பெற்றுவிட்டாரா படிப்பித்துக்கொண்டிருக்கின்றாரா என தெரியாது.

இதற்கும் அப்பால் கடந்த ஞயிற்றுக்கிழமை வவனியாவில் இருந்து ஆசிரியா ஒருவர் அதிகாலை 6 மணிக்கு எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் கதைத்தபோது அவர் 55 வயதுடையவர் என தெரியவந்தது.

ஒரு சிறு பிள்ளைக்கும் தெரியும் ஒரு பாடசாலையில் 25 வருடமல்ல 30 வருடம் சேவையாற்றியிருந்தாலும் 55 வயதுடையவர் என்றால் இடாற்றம் செய்யமுடியாது என்பது. அது தொடர்பில் சுற்றுநிருபமும் உள்ளது. எனினும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் நான் வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது அவர் இச் சுற்றுநிருபத்தை மதிப்பதாக இல்லை. ஆனால் வலயக்கல்விப் பணிப்பாளாரிடம் நான் சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யவேண்டாம் அல்லது வேறு எதுவும் சொல்லவில்லை.

இவ்வாறான சுற்றுநிருபம் இருக்கும்போது இடமாற்றம் செய்யமுடியாது என்றே சொல்லியிருந்தேன். ஆனால் அவர் சுற்றுநிருபம் ஒரு பக்கத்தில் இருக்க இடமாற்றம் செய்வேன் என்றே எனக்கு அவர் கூறியிருந்தார்.

அன்று வட மாகாண ஆளுனரை சந்தித்தபோது இது தொடர்பில் அவரிடம் சொல்லியிருந்தேன். மக்கள் பிரதிநிதிகளான எம்மையே மதிக்காது சுற்று நிருப்பத்திற்கு மாறாக பணியாற்றுபவர்கள் எவ்வாறு ஆசிரியர்களுடன் செயற்படுவார்கள் என. இது தொடர்பில் ஆளுனரும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த ஆசிரியருக்கு சம்பளமும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தனது சொந்தக்காரனுக்காக பழிவாங்கப்படுகின்றாரா அல்லது பாடசாலை முன்னேறக்கூடாது என்பதற்காக பழிவாங்கப்படுகின்றதா என நினைத்துப்பார்க்க முடியாத கட்டமாக உள்ளது என்று தெரிவித்தார்.