உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று நடந்த 10ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானும் மோதின. போட்டியில் பாகிஸ்தானை 160 ஓட்டங்களுக்குள் சுருட்டி மேற்கிந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்து இருப்பதால் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
எஞ்சிய 4 ஆட்டங்களில் குறைந்தது 3இல் வெற்றி பெற்றால் தான் கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியினை ரசிகர்கள் பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுங்கள், அல்லது முன்னதாகவே நாட்டிற்கு திரும்பிவிடுங்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி எதிர்வரும் மார்ச் 1ம் திகதி சிம்பாவே அணியினை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றநிலையே உள்ளது. இந்நிலையில் வெற்றி பெறுங்கள் அல்லது விளையாட்டி முடித்துக் கொண்டு நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என்று வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வசிம் அக்ரம் “அவர்களால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது, ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றால் முன்னதாகவே நாட்டிற்கு திரும்பட்டும்,” என்று கூறினார்.
மைதானத்தில் விளையாட்டை பார்ப்பவர்களையும், நாட்டில் தொலைக்காட்சிகளில் போட்டியை பார்ப்பவர்கள் குறித்தும் அவர்கள் உணரவேண்டும் என்று பெரிதும் காட்டமாக கூறியுள்ளார்.
1992ம் ஆண்டு இதேபோல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் போட்டி நடைபெற்றபோது பாகிஸ்தான் அணியே வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது. அப்போதைய பாகிஸ்தான் அணியில் முக்கிய இடம்பிடித்தவர் வசிம் அக்ரம் பாகிஸ்தான் கிர்க்கெட் அணியின் நிர்வாகத்தையும், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் விவகாரம் தொடர்பாக நான் கடந்த பலமாதங்களாக கூறி கொண்டே இருக்கின்றேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து 4 பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகின்றனர். அவர்களது வலுவானநிலையை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகின்றனர்.
நாம் கூடுதல் துடுப்பாட்ட வீரர்களை கொண்டு விளையாடினால், எதிர்அணியை பின்தொடர முடியும். பின்னர் ஏமாற்றம்தான் இருக்கும், இன்னும் பிரச்சனையில் பாகிஸ்தான் தரையிறக்கும். அவர்கள் விரைவில் அணியை மீண்டும் பலமானதாக கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறிய அக்ரம், அயர்லாந்திடம் தோல்வி அடைந்து அதிரடி காட்டிய மேற்திந்திய அணியே பாகிஸ்தானுக்கு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.