தென் ஆபிரிக்க அணியை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி!!

497

Ind

இன்று நடைபெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலக கிண்ணப் போட்டிகளில் இன்று நடைபெறும் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென் ஆபிரிக்காவும் பலப் பரீட்சை நடாத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களை எடுத்தது.

146 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான், 137 ஓட்டங்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார்.
மேலும் அங்கித் ரஹானே 79 ஓட்டங்களையும், விராத் கோஹ்லி ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆபிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் விக்கட்டுகளை சீரான இடைவெளியில் இழந்த தென்னாபிரிக்க அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

எனவே இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டுபிலசிஸ் 55 ஓட்டங்களையும் டி விலியர்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பாக அஸ்வின் 3 விக்கட்டுகளையும், சமி மற்றும் மோகித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட ஷிகர் தவான் ஆட்ட நாயனாக தெரிவு செய்யப்பட்டார்.