கர்நாடகாவில் தந்தை ஒருவரை அவரது மகனே துண்டு துண்டாய் வெட்டி கொன்று கிணற்றில் வீசிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்பள்ளாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (57) என்பவருடைய மகன் சுதாகர் (21).
குடிப்பழக்கம் உடைய சுதாகர், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து தந்தையிடம் நிலத்தை தன் பெயரில் எழுதி கொடுக்க மிரட்டியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுத்த வெங்கடேசப்பா, உனக்கு இப்போது எதுவும் எழுதி தரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசப்பாவை வெட்டி கொலை செய்தார்.
பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி துணியால் சுற்றி அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டு ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பத்தலவள்ளி பொதுமக்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து சென்ற பொலிசார் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கொலைவழக்கு பதிவு செய்து சுதாகரை வலைவீசி தேடி வருகின்றனர்.