தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.இவர் அவ்வப்போது புடவைக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று ஐதராபாத்தில் வணிகவளாகம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த சமந்தாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.சிலர் கையைப்பிடித்து இழுக்கவும் முயற்சி செய்தனர்.
இதனையடுத்து பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தி சமந்தாவை காரில் ஏற்றி அனுப்பினர்.