சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இன்று நடக்கும் பி பிரிவு ஆட்டத்தில் சிம்பாப்வே- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் சிம்பாப்வேயின் பந்தை துவம்சம் செய்த கிறிஸ் கெய்ல், இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் எட்டினார்.
147 பந்துகளை சந்தித்த கெய்ல் 215 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன் தென்னாபிரிக்காவின் கிறிஸ்டன்(188*), இந்தியாவின் கங்குலி(183) அதிக ஓட்டங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.