தென் மாகாண சபையின் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இன்று மாட்டு வண்டியொன்றில் பயணப்பட்டே சபைக்குச் சென்றிருக்கிறார்.
தமது சொந்த கப் ரக வாகனத்தை, ஜனாதிபதி செயலக வாகனம் எனக்கூறி அரசாங்கம் சுவீகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே தாம் இவ்வாறு மாட்டவண்டியில் பயணப்பட்டு சபை அமர்வுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.






