ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலை சமூகம் மற்றும் பொதுசன அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன போராட்ட பேரணியை நடாத்தி இருந்தனர்.
குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தி வெளியிடப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும், அதனை காலம் தாழ்த்தாது மார்ச் மாதமே வெளியிட வேண்டும் என கோரியுமே இப்போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைகழக பரமேஸ்வரன் ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி பலாலி வீதி ஊடாக நல்லூர் வீதியை சென்றடைந்தது.
நல்லூர் ஆலய வீதியில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு சமர்பிக்க என மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டன போராட்ட பேரணியில் பல்கலைகழக சமூகம், பொதுசன அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.