இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற ஒருவர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலவாயிலில் தங்கத்தை மறைத்து வைத்துள்ள சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை செய்தபோது அவர் தங்க காசுகளை விழுங்கிச் சென்றமை தெரியவந்துள்ளது.
அதன்படி சந்தேகநபர் ஏர்னாகுளம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 13 தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.