கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறை !!

554

murugan god

இதனை “நட்சத்திர விரதம்” என கூறுவார். சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும், சிறப்புடனும் பாலூட்டித் தாலாட்டி வளர்த்தனர். அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளன்று விரதத்தைத் தொடங்க வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நாளன்று விரதமிருத்தல் வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய விரதம் இது. கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று பகலில் உண்டு, இரவில் உண்ணாமல், விரதத்தைத் தொடங்க வேண்டும்.

மறுநாள் கார்த்திகையன்று நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து, தியானம், பாராயணம், கோவில் வழிபாடு என்ற இவைகளைச் செய்ய வேண்டும். பகலிலும், இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி, முருகனை வழிபட்டுச் சிறிதளவு உண்ணலாம். விரதமும் நிறைவு பெறும்.