வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (25.02) புதன்கிழமை திறந்து வைத்தார்.
வவுனியா பொது வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
தியாகிகள் அறக்கொடை அமைப்பால் 37 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இந் நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவிற்கு வடமாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வவுனியா பொது வைத்தயிசாலையின் பணிப்பாளா கு.அகிலேந்திரன். தியாகிகள் அறக்கொடை அமைப்பின் ஸ்தாபகர் தியாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.