“திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்” நிகழ்வு 01.03.2015 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கலைத் தூது கலையரங்கம், திருமறைக் கலாமன்றம், டேவிட் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
திரு.வேலணையூர் தாஸ் (தலைவர்- யாழ் இலக்கியக் குவியம்) தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை திரு.வினோத் அவர்களும், வாழ்த்துரையை கவிஞர் ந.சத்தியபாலன் அவர்களும் வழங்கவுள்ளனர்.
“விஞ்சிடுமோ விஞ்ஞானம்” கவிதை நூல் அறிமுகவுரையை ந.குகபரன் (ஆசிரியர், இலக்கிய விமர்சகர் வழங்கவுள்ளார்.
“மைதிலி தயாபரனின் நாவல்கள் அறிமுகமும் ஆய்வும்” திரு.சி.ரமேஷ் (இலக்கிய விமர்சகர், ஆய்வாளர்) அவர்களால் வழங்கப்படவுள்ளது. மேலும் இவ் விழாவிற்கான ஏற்புரையை நூலாசிரியர் திருமதி மைதிலி தயாபரன் வழங்கவுள்ளார்.
இன் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.