வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று(03.03) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கநகை கொள்ளை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டினையடுத்தே குறித்த நபர் கைது செய்யபப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கூரிய ஆயுதம் ஒன்றினை காட்டி வீட்டாரை பயமுறுத்தியுள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய கூமாங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வாறான பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.