போட் சிட்டி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

600

Fort city

சீனாவால் முன்னெடுக்கப்பட்ட ​கொழும்பு போட் சிட்டி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜீத் பீ பெரரா தெரிவித்தார்.

துறைமுக நகரத் திட்டத்தால் ஏற்பட்டதாக கூறப்படும் சூழலியல் பிரச்சினைகள், அந்த இடத்திற்கான உரிமம் தொடர்பான பிரச்சினைகள், தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு, பிரதமர் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.

இதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஜித் பீ பெரரா மேலும் தெரிவித்துள்ளார்.