நிர்வாணப்பபடங்களை வெளியிடுவது பலாத்காரத்தை விட மோசமானது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம் இது.
சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, பலாத்காரத்தை விட கொடுமையானது.
எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.