வவுனியாவில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்!!(படங்கள்)

497

வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்-பல்கலைக்கழக 34ம் அணி மருத்துவபீட மாணவர்களால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் விழிப்புணர்வின் முதல்நாள் நிகழ்வின் ஒருபகுதி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் 08 பாடசாலைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் ககலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு 02ம் திகதியன்று முற்பகல் 9.00 மணியளவில் 34 ஆம் அணி மருத்துவபீட மாணவன் யயந்தின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து ஓமந்தை மத்திய கல்லூரி அதிபரின் உரை இடம்பெற்றது. அதன் பின் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸாரால் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்களுக்கு கருத்தரங்குகளும் முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 34ம் அணி மருத்துவபீட மாணவர்களால் தயாரக்கப்பட்ட காணொளியொன்றும் காண்பிக்கப்பட்டது.

மாணவர்கள் அனைவருக்கும் வீதி ஒழுங்குமுறைகள் தொடர்பாகவும் முதலுதவி தொடர்பாகவும் வினாகொத்துக்கள் வழங்கப்பட்டு அவர்களின் அடைவு மட்டம் மருத்துவபீட மாணவர்களால் ஆராயப்பட்டது.

இந்நிகழ்வின் மற்றய பகுதிகள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வவுனியா வைத்தியசாலையின் உளமருத்துவ நிபுணர் சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

1 2