தியாகி அறகொடை நிதியத்தின் பிரதான அனுசரணையுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு ரூபா 37 லட்சம் பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு 25.02..2015 அன்று வடமாகாண முதலமைச்சர் கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் மற்றும் விதவைகளுக்கும் சிறிய பண உதவியும் அன்பளிப்பாக தியாகி அறகொடை நிதியத்தால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் கௌரவ க.வி. விக்னேஸ்வரன் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்திசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் சுகாதார துறைசார் உயர் அதிகாரிகள் , வைத்திய நிபுணர்கள் , ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு சாதாரணமானது அல்ல சுவிஸ் நாட்டில் வசிக்கும் எமது உறவான தியாகி அறகொடை நிதியஸ்தாபகர் திரு வி.தியாகேந்திரன் அவர்கள் யாழ்பாணம் நல்லூரில் தியாகி அறகொடை நிதியம் என்னும் அமைப்பை நிறுவி பல உதவிகளை மக்களுக்கு செய்து வரும் நிலையில் வவுனியா வைத்தியாசாலைக்கு தானே முன் வந்து இந்த உதவிகளை செய்து உள்ளார் ,மனிதருள் மாணிக்கமான இவரை வவுனியா மக்கள் சார்பாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு மனமார வாழ்த்துகிறது.