வவுனியா வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்த சார்பாக தியாகி அறகொடை நிதிய தியாகேந்திரனுக்கு வவுனியா மக்கள் சார்பாக நன்றிகள்!!

450

தியாகி அறகொடை நிதியத்தின் பிரதான அனுசரணையுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு ரூபா 37 லட்சம் பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு 25.02..2015 அன்று வடமாகாண முதலமைச்சர் கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் மற்றும் விதவைகளுக்கும் சிறிய பண உதவியும் அன்பளிப்பாக தியாகி அறகொடை நிதியத்தால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் கௌரவ க.வி. விக்னேஸ்வரன் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்திசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் சுகாதார துறைசார் உயர் அதிகாரிகள் , வைத்திய நிபுணர்கள் , ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு சாதாரணமானது அல்ல சுவிஸ் நாட்டில் வசிக்கும் எமது உறவான தியாகி அறகொடை நிதியஸ்தாபகர் திரு வி.தியாகேந்திரன் அவர்கள் யாழ்பாணம் நல்லூரில் தியாகி அறகொடை நிதியம் என்னும் அமைப்பை நிறுவி பல உதவிகளை மக்களுக்கு செய்து வரும் நிலையில் வவுனியா வைத்தியாசாலைக்கு தானே முன் வந்து இந்த உதவிகளை செய்து உள்ளார் ,மனிதருள் மாணிக்கமான இவரை வவுனியா மக்கள் சார்பாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு மனமார வாழ்த்துகிறது.

10686606_784856931602155_7487031619666748304_n 10726342_940929709284585_1051079614_n 10986647_784856988268816_7731098665016591677_n 11009093_784857811602067_7616717328079806198_n 11015160_940929669284589_778673347_n 11016497_940929292617960_893005706_n 11025233_784857494935432_6250934591206621971_n 11029544_784858511601997_6708427543390848364_n 11034308_784857378268777_935223938638525277_n 11039968_940929322617957_2126360932_n