வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)

489

வவுனியா மாவட்டத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்திட்டம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (06.03) வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், மற்றும் ந.சிவசக்தி ஆனந்தன்,

வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.ஜி.டி.லிங்கநாதன், திரு.தியாகராஜா, திரு.இந்திரராஜா, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் திரு.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 06 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு பாத்திரப் பொருட்களும், அலுவலக தளபாடங்கள், கதிரைகள் என்பனவும், சுமார் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

11 12 13 14