வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா வடக்கு ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.நவரட்ணம், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி அனுசியா, வர்த்தகர் திரு.சுரேஸ், ஆசிரிய ஆலோசகர் திரு.மகேஸ்வரன், வளவாளர் திரு.பகிரதன், ஓமந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.