இன்றைய இலங்கைக்கு எதிராக போட்டியில் டோனி விளையாடுவாரா ?

438

dhoni

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதையடுத்து இந்த நம்பிக்கை வலுவடைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நாணய சுழற்சியின் போது கோலி கூறுகையில், “டோனியின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இறுதிக்கு தகுதி பெற்றால் டோனி விளையடலாம்” என்றார்.

இதனால் தற்போது டோனி விளையாடுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடுவும் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு விதிமுறைகளின் படி டோனி விளையாட முடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் காயமடைந்தவர் நினைத்தால் இந்தியா திரும்பியிருக்கலாம். அவர் அந்த வாய்ப்பை உதறி அங்கு அணியை உற்சாகப்படுத்தவே தங்கியுள்ளார். டோனி விளையாடாவிட்டாலும் ஓய்வறையில் அவரது இருப்பே இந்திய வீரர்களுக்கு ஒரு பெரும் உத்வேகம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.