வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

502
வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான  ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று  வெள்ளிக்கிழமை (06.03.2015) மாலை 2.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் திரு.எஸ்.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உப பொலிஸ் உத்தியோகத்தர் திரு.ஆர்.எஸ்.குமார, வட மாகாணசபை உறுப்பினர் திரு.த.லிங்கநாதன்,   திரு.க.சந்திரகுலசிங்கம் , வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் திரு.க.சிவலிங்கம், உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.இ.சண்முகலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம்,ஆகியோர் கலந்து கொண்டனர் .
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து  மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி,கலாசார நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
1977092_1425343917712500_431083440_n 10461431_1601713530043368_7664319766495673610_n 11041705_1601724330042288_1435881361603848300_n 11037638_1601724653375589_8075889012000556814_n 11034303_1601724610042260_5155030907726916631_n 11034274_1601725003375554_6852838299203024570_n
IMG_7256 IMG_7251 11046361_1601724836708904_2675714569147977984_n 11043075_1601725273375527_870068991628611699_n IMG_7267 IMG_7271 IMG_7283 IMG_7301 IMG_7284
 .