வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை நேற்று(07.02) காலை தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும், வடமாகாணசபையின் உறுப்பினருமான திரு.ஜி,ரி.லிங்கநாதன், முன்னாள் உப நகரபிதா திரு .சந்திரகுலசிங்கம் (மோகன்) வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு .இ.நித்தியானந்தன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.வாசன், முன்னாள் அதிபர் தேசமான்ய சிவஞானம், சேக்கிழார் மன்ற தலைவர் திரு க.ஐயம்பிள்ளை, அதிபரும் வவுனியா மத்தியஸ்த சபை தலைவருமான திரு.சி,வரதராசா,
தமிழ் விருட்சம்அமைப்பின் தலைவரும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவருமான சந்திரகுமார் (கண்ணன்), கவிஞர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார் .சமூக ஆர்வலர்கள் திருவிளங்கம் ஐயா,ஞானபிரகாசம் ஐயா, பபிந்தன், கேசவன், நிகேதன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.