வவுனியாவில் இருந்து நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வழியில் பாவற்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒரு சிறிய தேநீர்கடை அங்கு தான் திருமதி சி.பூபதி என்கிற பூபதி அம்மா உள்ளார் .
குருநாகலில் பிறந்து 1958இல் வவுனியா பாவற்குளத்தில் குடியேறி திரு.சிவசுப்ரமணியம் என்பவரை மணந்து 10 பிள்ளைகளை பெற்று கணவனை இழந்து யுத்தத்தில் ஒரு மகனையும் இழந்து வாழ்கையில் போராடி யுத்தத்தில் பாவட்குளத்தில் இருந்து இடம் பெயர்ந்து இரணை இலுப்பைக்குளம் சென்று அங்கும் தேநீர் கடை ஒன்றை வைத்து பிள்ளைகளை ஆளாக்கி 2004 இல் மீண்டும் பாவற்குளத்தில் குடியேறி தனது 85 வயதிலும் தன் கையையே நம்பிக்கையாக கொண்டு தேநீர் கடையை வைத்து உழைத்து வாழ்ந்து வருகிறார்.
3 பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளிலும், மற்றைய பிள்ளைகள் இங்கு நல்ல நிலையில் இருந்தாலும் யாரின் கையையும் எதிர்பார்க்காமலும், பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினாலும் அதை திரும்ப அவர்களுக்கே அனுப்பி விட்டு மன தைரியத்துடன் வாழ்த்து வரும் பூபதி அம்மா அனைவருக்கும் முன் உதாரணமாகவும், உழைப்பின் சிகரமாகவும் வாழ்ந்து வருகிறார் ,
யாரும் கண்டு கொள்ளாத, யாரும் அழைத்து கௌரவிக்காத வன்னியின் அன்னை பூபதியை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு 08.03.2015 மகளிர் தினமான இன்று அவரது தேநீர் கடைக்கே சென்று கௌரவித்தது.
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) செயலாளர் மாணிக்கம் ஜெகன், உறுப்பினர் சர்மிலன் ,பாவற்குளம் சமூக ஆர்வலர் குனானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .