வவுனியா கற்குளம் மற்றும் நெளுக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நெளுக்குளத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணபோக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் மக்களுடனான
சந்திப்பிலும் ஈடுபட்டனர்.
இதன்பொது கற்குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வீட்டுத்திட்ட பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதியீனங்கள் தொடர்பிலும் அமைச்சர்கள் கேட்டறிந்துகொண்டனர்.