வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் புதிய தலைவராக வைத்திய கலாநிதி அ.திலீப்குமார் தெரிவு!!

547

வவுனியா மாவட்டத்தில் சாரணர் துறையில் அதயுயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றவர்களின் மன்றமான வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் 5வது பொதுக்கூட்டம் நேற்று (08.03) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாவட்ட ஆணையாளார் திரு.எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

தலைவராக வைத்திய கலாநிதி அ.திலீப்குமார், செயலாளராக சு.காண்டீபன், பொருளாளராக ஸ்ரீ.கேசவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக த.நிகேதன், உபதலைவராக இ.நிலானி , உபசெயலாலராக வ.பிரதீபன், பத்தராசிரியராக அ.அனந்தன், மன்றத்தின் உறுப்பினர்களாக வி.அனோஜன், ஜெ.பிரதீபன், நா.கீர்த்தனா, க.பிரதிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் பொதுகூட்டத்தில் மாவட்ட ஆணையாளர் திரு.எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கமலகுமார், மாவட்ட சாரணர் சங்க செயலாளர் திரு.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

psa1 psa2 psa3 psa5