முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை அறிவிப்பை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்வரும் 21ம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிய தடை விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்வதாக பொது மக்கள் அமைதி, கிறிஸ்தவ அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.