உலக கிண்ண போட்டியின் 33வது லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் இம்ருள் கயிஸ் களம் இறங்கினர். எனினும் இருவரும் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி முகமதுல்லா 103 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி சார்பாக பெற்றார்.
நிறைவில் 50 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை குவித்தது. இதனை தொடர்ந்து வெற்றிக்கு 276 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது.
இங்கிலாந்து அணி சார்பாக பெல் 63 ஓட்டங்களையும் பட்ளர் 65 ஓட்டங்களையும் பெற்றனர். இந்நிலையில் 48.3 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து அணி 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ருபெல் ஹசன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் அடிப்படையில் பங்களாதேஷ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நடைபெற்று முடிந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்து பரிதாமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.
குழு A இல் இருந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் காலிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்தன.