வவுனியா வீடமைப்பு திட்டம் பற்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆய்வு!!

1398

Risad

மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் சூடுவெந்தபிளவு கிராம மக்களின் தேவைகள், தொடர்புகள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரை அண்டிய கிராமங்களில் சூடுவெந்தபிளவு பழமை வாய்ந்த கிராமமாகும்.
இந்த கிராம மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அசாதாரண சூழ் நிலையில் வாழ்ந்து வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்றிட்டங்களுக்கு அமைய இந்த பிரதேசத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இன்னும் பொது மக்களின் வீடில்லாப் பிரச்சினையை நிவர்த்திக்கும் படி அமைச்சரின் கவனத்தை ஈர்க்குமாறு அந்த பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதனையடுத்து நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இக்கிராமத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.