தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோலியை விட இலங்கையின் சங்கக்கார மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் சதமடித்து, புதிய சாதனை படைத்தார்.
இதுகுறித்து முத்தையா முரளிதரன் கூறியபொது அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கை தோற்றிருந்தாலும் விளையாடிய விதம் கவர்வதாக உள்ளது.
பந்துவீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தற்போது உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்றால் அது குமார் சங்கக்கார தான்.
நீங்கள் வீராத் கோலி, டிவில்லியர்ஸ், மக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும் தற்போதைய சிறந்த வீரர் சங்கக்காரதான்.
மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாரவை பார்த்துதான்.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால் தன்னுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார் என தெரிவித்துள்ளார்.