ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை!!

548

Beggers

புகையிரதங்களில் யாசகம் செய்யும் யாசகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகையிரதங்களில் யாசகம் செய்பவர்களினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு பிரிவினரையே யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.