ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மர் பிணையில் விடுதலை!!

469

Jeyakumari

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட ஜெயக்குமாரி இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வெளிநாடு செல்ல ஜெயக்குமாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-அத தெரண-