வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)

507

வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஒன்று கூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மனு ஒன்றையும் கையளித்தனர். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இந்த மனுக்கள் வழங்கப்பட்டன.

இலங்கையின் வடபகுதிக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரோந்திரமோடி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநதான், ம.தியாகராசா, சி.சிவமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

9302_975170055836281_3019661997682608243_n 10299030_975170599169560_1141703841959025043_n 10429840_975170682502885_5405334222466014303_n10469725_975169972502956_7299261996355818987_n 10556377_975170135836273_7972531329989472404_n 11033194_975170395836247_2771894766980824149_n 11034243_975170465836240_6398120512546325316_n 11038122_975170199169600_2484469623004922872_n 11046420_975170302502923_5278840541219076724_n 11050182_975170545836232_2804471189941485420_n