ஏப்ரல் 23க்கு பின்னர் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. தீர்மானம்!!

633

UNP

நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே அடுத்து நடைபெற­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் முகம்­கொ­டுப்­பது என்றும், இதன்­படி ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்னர் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு நேற்றுப் புதன்­கி­ழமை ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

100 நாள் வேலைத்திட்­டத்­திற்­கென ஏற்­ப­டுத்­தப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தை ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்­னரும் நீடிக்கச் செய்­வ­தற்கு நேற்­றைய செயற்­குழுக் கூட்­டத்தின் போது பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் இணக்கம் தெரி­விக்­க­வில்லை என்றும் தெரி­ய­வந்­துள்­ளது. நீண்­ட­நேர வாத விவா­தங்கள், கருத்துப் பரி­மா­று­தல்­க­ளுக்குப் பின்­னரே மேற்­கண்­ட­வாறு அனை­வ­ரி­னது இணக்­கப்­பாட்­டுடன் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்த அக்­கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் செயற்­கு­ழுவின் தீர்­மா­னத்தை உறு­திப்­ப­டுத்­தினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நேற்றுப் புதன்­கி­ழமை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் தேசியத் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடி­யது. இதன்­போதே மேற்­படி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. மேற்­படி கூட்­டத்தில் அடுத்து வரும் பொதுத் தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்­பான விட­யமே பிர­தான கருப்­பொ­ரு­ளாகக் கொண்டு நேற்று பேசப்­பட்­டுள்­ளது.

இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மேலும் கூறு­கையில்,

அடுத்­த­தாக நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த­லா­னது புதிய முறை­மையின் அதா­வது தொகு­தி­வாரி முறை­மையின் நடத்­தப்­பட வேண்­டு­மெனில் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்­குள்­ளான காலப்­ப­குதி அதற்குப் போது­தா­ன­தல்ல என்றும் தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது கூற்று இன்­றைய (நேற்று) செயற்­குழுக் கூட்­டத்தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தாயின் சில மாதங்கள் செல்­லலாம் என்றும் உட­ன­டி­யா­கவே அதனை மேற்­கொள்ள முடி­யாது என்­ப­தாலும் அடுத்து நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­தலை தற்­போது நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சார முறை­மையின் பிர­கா­ரமே பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தென்றும் அதனை எதிர்­கொள்­வ­தென்றும் செயற்­கு­ழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி தற்­போது இருந்து வரும் தேசிய அர­சாங்கம் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு மாத்­தி­ரமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே 100 நாட்­களின் பின்னர் நாம் தேர்­த­லுக்கு செல்ல வேண்­டிய கட்­டா­யத்தில் உள்ளோம். அந்த வகையில் நாம் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­த­தன்­படி ஏப்ரல் மாதம் 23 ஆம் திக­தியின் பின்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் ஏப்ரல் 23ஆம் திக­திக்குப் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்­கொள்­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ளது.

சமுர்த்தி சலு­கைக்கு குழு நிய­மனம்

இதே­வேளை சமுர்த்தி பெறு­வோரின் எண்­ணிக்­கையை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. அந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பிர­காரம் சமுர்த்தி பய­னா­ளர்கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தென்றும் அது தொடர்­பான வேலைத் திட்­டங்­களை விரை­வாக முன்­னெ­டுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
இதற்­கென விசேட குழுவும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்படி அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சமந்த கருணாரத்ன உள்ளிட்டோர் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

300 இலட்சம்

இது இவ்வாறிருக்க நாட்டின் வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்களை கருத்திற்கொண்டு ஒவ்வொரு தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கும் தலா 300 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.