சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரை நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மத்துகம பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 74 பேரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள் சிலர் குறித்து தொழிற்சாலையில் பணியாற்றுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, விசாரணை நடத்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு குறித்த இந்தியர்களின் கடவுச்சீட்டுகளை பறித்துள்ளது.