முத்தரப்பு கிரிக்கெட் கிண்ணம் யாருக்கு?? பரபரப்புடன் களமிறங்கும் இலங்கை இந்திய அணிகள்!!

410

cricket

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் சோபிக்கத் தவறியதால் சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவி, இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாது வெளியேறியது.

இதேவேளை முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி கண்டு பின்னர் சுதாகரித்துக் கொண்ட இந்திய அணிக்கு மழையும் கைகொடுக்க அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் அபார வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்றேயுள்ளது.

இந்திய அணியின் தலைவர் டோனி 2-வது லீக் ஆட்டத்தின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் டோனி அணியில் இடம் பெறவில்லை. தற்போது டோனியின் காயம் நன்கு குணமடைந்து வருவதாகவும், இறுதிப்போட்டியில் டோனி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் தற்போது தலைவராக உள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் டோனி விளையாடினால் விஜய் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.

இலங்கை அணி லீக் ஆட்டத்தில் 2 வெற்றிகள், 2 தோல்விகளைக் கண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் விறுவிறுப்பான இறுதிப்போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.