மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

417

Eating

நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் ஒன்றுதான் சாப்பிடுவது. மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடக் கற்றுக்கொள்வது நல்லது.

ஆனால் எப்படி சாப்பிட்டாலும், உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம்.

சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். சைவ உணவை விரைவாக சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும்.

குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகச் சாப்பிடுவது நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

இரவில் எட்டு மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அதுவும் மிதமாக உண்பதே நல்லது. எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்துச் சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவு சமிபாடு ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன.

அவை, பரோட்டிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.

பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப் பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பியே 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கிறது.

உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ் நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. அதனால் நாம் உயிர் வாழ்வதற்காக உண்ணும் உணவை நன்றாக சாப்பிட வேண்டும்.