வவுனியா குருமன்காட்டில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!

539

MC

வவுனியா, குருமன்காடு புகையிரத பாதையருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (10.03) இரவு மோட்டர் சைக்கிளை புகையிரத பாதையருகில் நிறுத்திவிட்டு சென்றவர் மீண்டும் வந்து பார்த்த போது அவ்விடத்தில் மோட்டர் சைக்கிளை காணவில்லை. சூட்சுமமான முறையில் பூட்டை உடைத்து குறித்த மோட்டர் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் இது தொடர்பில் மோட்டர் சைக்கிள் உரிமையாளரால் தம்மிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

-தமிழ் CNN-