நான் பழைய மாதிரி இல்லை இப்போது மாறி விட்டேன் : அஞ்சலி!!

443

Anjali

அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில் நடித்தார். இப்படம் 2012ல் வந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப பிரச்சனையால் சினிமாவை விட்டு ஒதுங்கி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ளசிங்கம் படங்களில் நடிக்கிறார். அஞ்சலி கூறியதாவது..

சினிமா என்னை நிறைய மாற்றி விட்டது. முதல் படத்தில் அறிமுகமாகும் போது என்னிடம் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்தன. அந்த குணங்கள் பிறகு இல்லாமல் போய்விட்டது. சூழ்நிலைகள் என்னை மாற்றி விட்டன.

பழைய அஞ்சலியாக இப்போது இல்லை ரொம்ப மாறிவிட்டேன். முன்பெல்லாம் படம் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன். தோற்றால் வேதனைப்படுவேன்.

இன்று அப்படி இல்லை. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன். முன்பை விட இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இனிமேல் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் நடந்தது. அதற்கு நான் பொறுப்பு இல்லை. பார்ட்டிகளுக்கு போவது எனக்கு பிடிக்காது என்று அஞ்சலி கூறினார்.