வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தர்மரட்ணம் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார் .அத்துடன் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பழையமாணவர் சங்கத்தினர் கல்விவலய உத்தியோகத்தர்கள் மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலகர்கள் பெற்றோர் என பல்வேறு பட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர்.