இலங்கையிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த வர்த்தகர் ஒருவருக்கு (45) ஓராண்டு காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற குற்றம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து பயணித்துள்ள வர்த்தகருக்கு அருகில் அமர்ந்து குறித்த சிறுமி பயணித்துள்ளார். விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வர்த்தகர் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிய முயற்சித்துள்ளார். உடனடியாக சிறுமி விமான பணியாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
இதன்போது சிறுமியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ள நபர் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும் மீண்டும் விளக்குகள் அணைக்கப்பட்டபோது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி சத்தமிட்டு பயணிகள் அனைவருக்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
விமானம் டுபாயை சென்றடைந்தவுடன் வர்த்தகரை கைது செய்த அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வர்த்தகர் போதையில் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடமும் பயணிகளிடமும் வாக்குமூலத்தை பொலிஸார் பெற்றுக்கொண்டதுடன் நீதிமன்றுக்குக்கு சமர்ப்பித்தனர்.
இலங்கை வர்த்தகரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் ஒருவருட கால சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.