வடமாகாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகளை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது.