வவுனியா மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு 2014ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (13.03) வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.இ.இந்திரராசா, திரு.ஜி.டி.லிங்கநாதன், திரு.ம.தியாகராஜா, வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தேன்மொழி மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு அலுவலக தளபாடங்கள், கதிரைகள் என்பனவும் பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.