2 வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை!!

429

Rape

பிரித்தானியாவில் இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் மன்செஸ்ட்டர் நகரில் ஜெரிமி ஓகெட்ச்(30) என்ற நபர் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளான். கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகில் வசித்த வந்த 2 வயது குழந்தையை அவன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.

மருந்துக்கடை வைத்திருந்ததால் அவனிடன் ஏராளமான வயாகரா மாத்திரைகள் இருந்துள்ளது. அதில் ஒன்றை விழுங்கிய பிறகு, அழைத்து வந்திருந்த பிஞ்சு குழந்தையை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்.

சுமார் 55 நிமிடங்கள் குழந்தையை சித்ரவதை செய்த அவன் அதை ஒரு கமராவில் வீடியோவாக பதிவு செய்துள்ளான்.

இந்நிலையில், அவனது வீட்டிற்கு வந்த அவனது காதலி, அவன் அறையில் இல்லாதபோது கணனியில் பதிவாகியிருந்த அந்த காட்சிகளை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை பொலிசாருக்கு தெரியபடுத்தியதும் இக் கொடூரனை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த வழக்கறிஞர்கள், நீதிபதி அந்த கொடூர வீடியோவை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நீதிபதி ஹிலாரி மேன்லிக்கு அந்த வீடியோ போட்டு காட்டப்பட்டது.

வீடியோ முழுவதையும் பார்த்த நீதிபதி கண் கலங்கி மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்ற ஒரு கொடூரத்தை தான் இதுவரை பார்த்தது இல்லை என மன வேதனையுடன் கூறியுள்ளார்

தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூட புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ள அந்த குழந்தையை கொடூரமாக பாலியல் சித்ரவதை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகிறது எனக்கூறிய நீதிபதி குற்றவாளிக்கு 15 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.