வவுனியா குளவிசுட்டான் அரச தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.மு.பாலசுப்பிரமணியம், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு அதிபர் மற்றும் சமூகம் தந்திருந்த விருந்தினர்களினால் பரிசில்களும் சின்னங்களும் வழங்கப்பட்டன.