உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதியில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2015 இன் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் முதலாவது காலிறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை இலங்கை அணி சந்திக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இப் போட்டி நடைபெறவுள்ளது.
தற்போது இரு அணிகளும் போட்டிக்கு தம்மை சிறப்பாக தயார்படுத்தி வருகின்ற நிலையில் இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.