இந்தியாவை பங்களாதேஷ் அணி தோற்கடிக்கும் : பயிற்சியாளர் ஹதுருசிங்க நம்பிக்கை!!

476

Hathurusinghe

உலக கிண்ண கிரிக்கெட்டில் 2வது காலிறுதி ஆட்டம் மெல்போர்னில் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் இந்தியாவும், பங்காளதேஷூம் மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து பங்காளதேஷ் அணி பயிற்சியாளர் ஹதுருசிங்க கூறியபோது, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது என்பதை அறிவோம். அவர்கள் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருக்கிறது. மேலும் அவர்களது வேகப்பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு ஆட்டத்துடன் பங்காளதேஷ் வீரர்கள் திறமையை வளர்த்து வருகிறார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். இது தான் எங்களது பலம்.

பங்காளதேஷ் அணி திறமையை வெளிபடுத்தி விளையாடினால் இந்தியாவை வீழ்த்தி சாதிக்கும். அது நடக்கும் என நம்புகிறேன். பங்காளதேஷ் அணி தலைவர் மொர்தாசா களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.