இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நாடாக மாற்றம் அடைந்து வருவதாக இந்திய இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலம் இவை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலும் பல துறைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.